நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்
ADDED :3659 days ago
சிவகங்கை; சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா ஏப்., 20 ல் துவங்கியது. ஏப்., 21ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, மாலை வெள்ளி கேடயத்தில் பெருமாள் எழுந்தருளினார். இரவு கோயிலில் இருந்து வெள்ளி குதிரையில் சுவாமி அழகர் கோலத்தில் புறப்பட்டார். பின் மண்டகப்படி, கோயில்களில் எழுந்தருளினார். நேற்று காலை 9:50 மணிக்கு வெண்பட்டு உடுத்தி பூவாளம் ஆற்றில் இறங்கினார். இரவு தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. இன்று மண்டகப்படி, கோயில்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி, தீர்த்தவாரி நடக்கின்றன.