பூமாரியம்மன் கோயிலில் சித்திரை விழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்
ADDED :3590 days ago
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டிபுரம் பூமாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இக்கோயில் விழா ஏப். 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை,மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேங்கள் நடந்தன. நேற்று முன்தினம் சங்கரபாண்டிபுரம் அம்மச்சியாரம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் இட்டு வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு விரதம் இருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டு நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை 4 சமுதாய நாட்டாமைகள் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது.