உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தினமும் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜை தொடங்கின. காலை 9 மணிக்கு சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். 9.30 மணிக்கு செந்தில் பட்டர், சுப்ரமணிய பட்டர், செண்பக பட்டர், தெய்வசிகாமணி பட்டர் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பூமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

* சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் திருவேட்டை அழகு அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்., 23 காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜை, ஏப்., 24 காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தன. காலை 9:30 மணிக்கு கடம்புறம்பாடு நடந்தது. தொடர்ந்து 9:40 மணிக்கு கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. காலை 10 மணிக்கு மகா பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !