தேவநாத சுவாமி கோவிலில் உண்டியல் வசூல் ரூ.22 லட்சம்
ADDED :3453 days ago
கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியலில் 22 லட்சத்து 7 ஆயிரத்து 317 ரூபாய் காணிக்கை வசூலானது. கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த இப்பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வலர்கள் 50 பேர் ஈடுபட்டனர். உண்டியலில், 22 லட்சத்து 7 ஆயிரத்து 317 ரூபாய், 554 கிராம் தங்க நகைகள், 372 கிராம் வெள்ளி பொருட்கள், 6 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் நிர்வாக அலுவலர் நாகராஜன், பாடலீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் ரத்தினாம்பாள், ஆய்வர் கோவிந்தன் உடனிருந்தனர்.