ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்!
திருச்சி: பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க, ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் விசேஷம் என்றாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேரோட்ட திருவிழாவும் வெகு பிரசித்திப் பெற்றது.
விஜயநகர அரசரான இரண்டாம் ஹரிஹரனின் மகன் விருபாஷன் என்ற விருப்பண்ண உடையார், ஸ்ரீரங்கம் கோவில் புனர் நிர்மாணத்துக்காக ஏராளமான நன்கொடைகள் வழங்கியுள்ளார். தம்முடைய பெயரால் சித்திரை மாதத்தில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தை, கி.பி. 1383 ஆண்டு ஏற்படுத்தி வைத்தார். ஆயிரம் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடக்கும் விருப்பன் திருநாள், கடந்த, 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் பல்வகை வாகனங்களில் எழுந்தருளி, ஆஸ்தான மண்டபகங்களில் மண்டகப்படி கண்டருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் இன்று (5ம் தேதி) நடந்தது. நடந்த சித்திரை தேர்ரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்