திருநள்ளார் சனிஸ்வர பவான் கோயிலில் பிரமோற்சவ வீதியுலா!
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி புஷ்பபல்லாக்கு வீதியுலா நடந்தது. காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா நேற்று கோடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது.கடந்த 4ம் தேதி தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ரிஷப கொடியேற்றமும், பஞ்சமர்த்தி வீதி உலா நடந்தது. கடந்த 5ம் தேதி முதல் 7 ம் தேதி வரை விநாயகர் உற்சவமும்,கடந்த 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வர சுப்ரமணிய சுவாமி உற்சவமும்,நேற்று முன்தினம் இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.நேற்று செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும், வரும் 14ம் தேதி பூத வாகனத்திலும், 15ம் தேதி யானை வாகனத்திலும் 16ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 18 ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.19ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 20ம் தேதி தெப்ப உற்சவமும், 22ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னிர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.