உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி: சிவகாசியில் இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான, பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா 11 நாட்கள் நடந்தது. அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆறாம் நாள் விழாவில் கல்மண்டபத்தில் வீற்றிருந்து சொரூப திருக்கோலத்தில் காட்சியளித்தார். கழுகேற்றம் நடந்தது. பக்தர்கள் கயறு குத்து, அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. அம்மன் பெரிய தேரிலும், விநாயகர் சிறிய தேரில் வீதி உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !