திருத்தணி திரவுபதியம்மன் திருக்கல்யாணம்
ADDED :3435 days ago
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி அடுத்த, குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு காலையில் சிறப்பு பூஜைகள், மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் நடந்து வருகிறது. நேற்று மதியம், 12:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உற்சவர் திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். வரும், 16ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடக்கிறது.