அருள் சக்தி அன்னை கோவிலில் கனகாபிஷேகம்
ADDED :3432 days ago
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் அருள் சக்தி அன்னை கோவில் 3வது கோடி அர்ச்சனை பெரு விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. கடந்த 15ம் தேதி பால், பன்னீர், சந்தன அபிஷேகம் நடந்தது. நாளை 20ம் தேதி ஐந்தாவது குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. 22ம் தேதி காலை 6.30 மணிக்கு விஸ்வரூப அலங்கார காட்சி நடக்கிறது. 8.00 மணிக்கு ரத்தின பல்லக்கில் அருள்சக்தி அன்னை இல்லத்து தாய் சிலைக்கு கனகாபிஷேகம் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு வெள்ளி விமானப் புறப்பாடு நடக்கிறது.