குன்னுார் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்
ADDED :3429 days ago
குன்னுார்: குன்னுார் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நாளை வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. குன்னுார் வி.பி., தெரு சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடக்கிறது. இதேபோல, அருவங்காடு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில், சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், பால்குட ஊர்வலம் ஆகியவை நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.