உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணப்பிரச்னை தீர்க்கும் யானை!

பணப்பிரச்னை தீர்க்கும் யானை!

தெய்வானையை முருகனுக்கு திருமணம் முடித்த போது, தேவேந்திரன் சீதனமாக பொன்னும் பொருளும் பரிசாக அளித்தார். அதில் தேவலோகத்திலுள்ள ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இடம் பெற்றிருந்தது. இதன்பின் இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாளமான ஐராவதம், தன்னை விட்டுப் பிரிந்ததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்த இந்திரன், தன் மருமகனிடம் கலந்தாலோசித்து, யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி பார்த்திருக்கும்படி செய்தார். அதன்பின் இந்திரனின் செல்வ வளம் அதிகரித்தது. இதனடிப்படையில் திருத்தணியில், இந்திரனின் வாகனமான யானை கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த யானையை தரிசித்தால் பணப்பிரச்னை நீங்கும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !