திண்டிவனம் பெருமாள் கோவிலில் உற்சவர் வீதியுலா
ADDED :3438 days ago
திண்டிவனம்: திண்டிவனம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. திண்டிவனம் பெரு மாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கி நடந்து வருகிறது. இதன் 6ம் நாள் நிகழ்ச்சி வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், நடந்தது. லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு காலை அபிஷேகமும், மாலை யானை வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. நிகழ்ச்சியில், வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் , செயலாளர் பி.ஆர்.எஸ்., ரங்கமன்னார், இயக்குனர்கள் வாசுதேவன் சீனிவாசன், வாசவி கிளப் துணை ஆளுநர் சிவக்குமார், மாவட்டத்தலைவர் மனவளக்கலை பிரபாகரன், தலைவர் நவநீத கிருஷ்ணன், செயலாளர் நடராஜன், சீனிவாசன் கலந்து கொண்டனர்.