உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா!

கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா!

திருத்தணி: ஊராட்சியில் நடந்த கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி  அடுத்த, மாம்பாக்கசத்திரம் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா  நடந்தது. இதையொட்டி, நேற்று, காலை 8:00 மணிக்கு, முக்கோட்டி அம்மன்  கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கூழ்வார்த்தல்  நிகழ்ச்சியும், பூகரகம் ஊர்வலமும் நடந்தது. மாலையில் நடந்த பூகரகத்தின்  போது, கிராம வாசிகள் ஒருவர் மீது ஒருவர், மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ந்தனர்.   இரவு 8:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கை அம்மனுக்கு, சிறப்பு  அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பூகரகத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், இரவு  நாடகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !