உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் வரும் 19ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது விழாவிற்கான பந்தல் அமைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது

காரைக்காலில் வரும் 19ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது விழாவிற்கான பந்தல் அமைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமான் மாங்கனி கொடுத்து அனுப்பி. அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைலலால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. வரும் ஜீன் 17ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும்.18ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், மறுநாள் ஜீன்.19ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும். அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் பைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் சிறப்பாக செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !