பத்தாக்கும் பத்மா!
ADDED :3571 days ago
லட்சுமியின் ஒரு பெயர் பத்மா அல்லது பத்மாவதி. திருப்பதியில் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். அவருடைய பிராட்டியான அலமேலு மங்கைத் தாயார், மலையடிவாரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள திருச்சானுõரில் பத்மாவதி என்னும் பெயரில் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார். தினமும் பெருமாள் இரவில் ஏழுமலையில் இருந்து, தாயாரைப் பார்க்க வந்து விட்டு, மீண்டும் அதிகாலையில் திருமலைக்குச் சென்று விடுவதாக ஐதீகம். பெருமாள் குபேரனிடம் கல்யாணத்திற்காக வாங்கிய கடனை விரைவில் அடைப்பதற்காக பக்தர்கள் பொன், பொருள் அனைத்தையும் காணிக்கையாக ஏழுமலையில் செலுத்துகின்றனர். செலுத்தும் காணிக்கையைப் போல பத்து மடங்காக மீண்டும் நமக்கு திருப்பி அருள்பவள் இந்த பத்மாவதி தாயாரே.