உலக நன்மைக்காக பழநிகோயிலில் சிறப்பு யாகபூஜை, அன்னாபிஷேகம்
பழநி: உலகநலன் வேண்டி பழநி மலைக்கோயிலில் 108 சங்குகளின் புனிதநீர் நிரப்பி, சிறப்பு யாக பூஜை மற்றும் அன்னா பிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் பல்வேறு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து, சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. உச்சிக் காலத்தில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு 108 சங்கு புனிநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, மூலவருக்கு மஞ்சள் அன்னம் கிரீடமாக சூட்டி, வில்வம் கலந்த சுத்த அன்னம், பாதங்களில் படைக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, அசோக், சதீஸ், செந்தில்குமார், விஜயகுமார் செய்தனர். இன்று (ஜூன் 20ல்) திருஆவினன்குடி கோயிலில் கண்பத் ஓட்டல் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் ஏற்பாட்டில் மாலை 5.30 மணிக்குமேல் அன்னாபிஷேகம் நடக்கிறது. அருணகிரிநாதர் விழா நடக்கிறது. ஜூன் 21ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 22ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் கந்தவிலாஸ் விபூதிஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்னு ஏற்பாட்டில் அன்னாபிஷேகவிழா நடக்கிறது.