உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை செய்யும் முன் படியுங்க!

பூஜை செய்யும் முன் படியுங்க!

பூஜை செய்வதற்கு முன் சில ஏற்பாடுகளைச் செய்வோம் இல்லையா! அதை முறைப்படி செய்ய இதைப் படியுங்க!
*சுவாமியின் இடதுபுறம் சாம்பிராணி காட்டும் துõபக்கரண்டியையும், வலதுபுறம் கற்பூரத்தட்டையும் வைக்கவும்.
*இடதுபுறம் பழங்களையும், வலதுபுறம் பலகாரங்களையும் வையுங்கள்.
*தீர்த்தம் பருகிய பிறகு, மீதமுள்ளதை மறுநாள் காலையில் செடிகள், மரங்களில் கொட்டுங்கள். பூந்தொட்டி இருந்தால் அதில் விடலாம். தரையில் ஊற்றக்கூடாது.
*படங்களையும், பூஜைக்குரிய மேஜையையும் வாரம் ஒருமுறை துடையுங்கள். விளக்கை தினமும் தேய்த்தால் நல்லது. பெரிய விளக்காக இருந்தால், வாரம் இருமுறையாவது சுத்தம் செய்யுங்கள்.
*வெறுமனே தீபதுõபம் காட்டுவதை விட, கடவுளைக் குறித்த நாமங்கள், பாடல்கள், ஸ்லோகங்களை உச்சரித்தபடியே காட்டுவதே உயர்ந்தது.
*பூஜை நேரத்தில், குடும்பத்தினர் எல்லாரும் பத்து நிமிடமாவது செலவழிக்க வேண்டும். கூட்டாக பாடல்களைப் பாடுவது,ஸ்லோகங்களைச் சொல்வது அதிக பலனைத் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !