குருவன்குப்பம் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED :3425 days ago
மங்கலம்பேட்டை: குருவன்குப்பம் மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் மாரியம்மன் ÷ காவில் செடல் திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனையடுத்து தினமும் காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சி றப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (1ம் தேதி) காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 2:00 மணிக்கு நடந்த செடல் திருவிழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.