உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராண நாதேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு

பிராண நாதேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் ஏரிக்கரையில், அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மங்கலாம்பிகை உடனுறை பிராண நாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அதையொட்டி, கோவில் வாளகத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, பிராண நாதேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கூனிச்சம்பட்டு கலியபெருமாள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல், கூனிச்சம்பட்டு காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையடுத்து, நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், 21 மூலிகையால் பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை குருக்கள் ராமசுப்ரமணி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !