வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசன விழா
ADDED :3371 days ago
திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரையில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் உள்ள வக்ரகாளியம்மனுக்கு சந்தனக்கா ப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, இரவு 12:00 மணிக்கு, கோபுரத்தில் ஜோதி தரிசனம் நடந்தது. புதுச்சேரி மற்றும் தமிழகப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் பாலசுப் ரமணியராஜன், மேலாளர் ரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.