உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது. திருவள்ளூர், பூங்கா நகர் அடுத்த, தேவி மீனாட்சி நகரில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூல நட்சத்திரத்தன்று, 32 அடி உயரத்தில் எழுந்தருளிய மூலவர் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும், உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் நேற்று நடந்தது. மூல மந்திர ஹோமம், காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை நடைபெற்றது. பின், மூலவர் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகமும் திருமஞ்சனமும் நடந்தன. இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !