முனியப்பன் கோவில் திருவிழாவில் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
ADDED :3398 days ago
இடைப்பாடி: ஆலச்சம்பாளையத்தில், முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. அதில், ஏராளமான ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைப்பாடி அருகே, ஆலச்சம்பாளையத்தில் உள்ள மோலானி முனியப்பன் கோவிலில், ஆடி முதல் வியாழனையொட்டி, நேற்று முன்தினம் மாலை, திருவிழா, சிறப்பு பூஜை நடந்தது. அதில், இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, முனியப்பனுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.