பகவதி மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
ADDED :3401 days ago
கடலுார்: கடலுார் பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது. கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள பகவதி கழுத்து மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. 4ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சந்தன அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. 5ம் தேதி காலை 8:00 மணிக்கு பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வருதல், 11:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பகல் 12:00 சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு சந்தன அலங்காரம், மகா தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு மாரிய ம்மன் வீதியுலா நடக்கிறது.