முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா
ADDED :3401 days ago
மங்கலம்பேட்டை: கோ.பூவனுார் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி மாதம் முதல் வெள்ளியை ஒட்டி, மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணியளவில் நடந்த விழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.