கள்ளக்குறிச்சி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3401 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் தேர்த்திருவிழா நடந்தது. முத்து மாரியம்மன் மூலவர், உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து திருகல்யாண பூஜைகள் துவங்கியது. விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், அங்குரார்பணம் பூஜைகள் நடந்தது. பின், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, முத்துமாரியம்மன், காத்தவராயன், ஆரியமாலா, கற்பழகி சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் நற்குணம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். கேசவ பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.