உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநாத சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றம்

குருநாத சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றம்

அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோவில் ஆடித்தேர் திருவிழாவுக்கு நேற்று கொடியேற்றப்பட்டது. கடந்த, 20ம் தேதி, பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று காலை, 11 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, பெருமாள் சுவாமி, காமாட்சியம்மன், குருநாதசுவாமிகளின் வெள்ளிக் கவசம் மற்றும் பூஜைப் பொருட்கள் அடங்கிய மூங்கில் பெட்டகத்தை சுமந்து, வனக் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடி கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தபின், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து, கொடிக் கம்பத்தை நிலை நிறுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆக., 3ம் தேதி முதல், வன பூஜை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !