பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுாரில் உள்ள, அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல கு ருக்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சமர்ப்பிக்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். பின், புடவைகளும், தாலி, வளையல்களும் சாற்றப்பட்டன. பழ வகைகள், பால், தயிர், நெய் ÷ பான்றவை, யாக குண்டத்தில் சேர்ப்பித்து, தீபாராதனை நடந்தது. அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.