உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளாபுரி அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

கொள்ளாபுரி அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

திருத்தணி: ஆடி மாத உற்சவத்தையொட்டி, கொள்ளாபுரி அம்மன் கோவிலில், நேற்று, கூழ்வார்த்தல் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது.  திருத்தணி  அடுத்த, காசிநாதபுரம் காலனியில் உள்ள கொள்ளாபுரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் நான்காவது  ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தலில்,  பொங்கல் வைத்தல் மற்றும் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது.  அந்த  வகையில் நேற்று  காலை, 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை  நடந்தது. காலை,  10:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும்  நிகழ்ச்சியும் நடந்தது.  மாலை, 6:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு  அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு,  9:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !