உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டியில் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம்

பண்ருட்டியில் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம்

பண்ருட்டி: பண்ருட்டியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சக்தி பீடம் சார்பில் பெண்கள் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.   கடந்த 13ம் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றுதல் நடந்தது. 14ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிக்கு சோமநாத சுவாமி கோவிலில் இருந்து கஞ்சிக் கலயம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை டி.எஸ்.பி., முரளிதரன் துவக்கி வைத்தார்.   காலை 11:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், 11:45 மணிக்கு அன்னதானம் நடந்தது. 12:30 மணிக்கு பிரசார மாவட்ட இணைச் செயலர் சுப்ரமணியன் ஆன்மிக  சொற்பொழிவு நிகழ்த்தினார்.  கடலுார்: வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மழை வேண்டி 35ம் ஆண்டு ஆடி மாத கஞ்சி கலயம், முளைப்பாரி ஏந்திய ஊர்வலம் நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதி வழியாக ஆதிபராசக்தி மன்றத்தை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !