உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலம்

அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலம்

திருவள்ளூர்: தர்மராஜா கோவில் உற்சவத்தில், அர்ஜுனன் - சுபத்திரை திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவின், நான்காவது நாள் உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், தம்பதி சமேதராக, புல்லரம்பாக்கம் கிராம வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !