உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தா கோவிலில் பூணுால் மாற்ற சிறப்பு ஏற்பாடு

சித்தானந்தா கோவிலில் பூணுால் மாற்ற சிறப்பு ஏற்பாடு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், நாளை 18ம் தேதி,    யஜூர் வேத ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்ற  சிறப்பு ஏற்பாடு   செய்யப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், நாளை  18ம் தேதி யஜூர் வேத, ஆவணி  அவிட்டத்தை முன்னிட்டு காலை 5:00 மணி முதல் பகல்   11:00 வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குழுக்களாக  ஹோமத்துடன் பூணுால் அணிய,  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள் 19ம் தேதி, காலை 6:00 மணி முதல் 7.30 வரை, உலக நன்மை   வேண்டி,  புதுச்சேரி பிராமண சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா சார்பில்  சமஷ்டி காயத்ரி ஜபம் நடக்கிறது. ஆவணி அவிட்டத்திற்கு  வருபவர்கள், தாம்பாள தட்டு, செம்பு,  பஞ்சபாத்திரம், பிளாஸ்டிக் மேட், வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், அரிசி, நெய், குருதட்சனை,  கொண்டு வர  வேண்டும். மேலும் விபரங்கள் அறிய, ராஜா சாஸ்திரிகளை, 98423 29770,  98423  27791 என்ற மொபைல் எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !