திருமலையில் பவித்ரோற்சவம் நிறைவு!
ADDED :3384 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய, தேவஸ்தானம் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, திருமலையில் நடந்த பவித்ரோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு நடந்த திருமஞ்சனம். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.