உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பொன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

காட்டுமன்னார்கோவில்: டி.நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள பொன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள பொன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 7ம்  தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதியுலா  நடைபெற்றது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று  முன்தினம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !