உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 100 ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணி

100 ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணி

அன்னுார்: சொக்கம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் திருப்பணி தீவிரமாக நடக்கிறது. சொக்கம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், துர்க்கை மற்றும் நவகிரகங்களின் சன்னதிகள் உள்ளன. கோவிலில், சிற்பங்கள் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்படுகிறது. புதிதாக தட்சிணாமூர்த்தி, தண்டாயுதபாணி திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேகம் வரும் செப்.,3ம் தேதி துவங்குகிறது. அன்று மாலையில் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலையில் இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மாலையில் மூன்றாம் கால வேள்வி, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 5ம் தேதி காலை நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9:30 மணிக்கு விமானங்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. மதியம் காரமடை, தாசபளஞ்சிக திருப்பாவை பஜனை குழுவின் பஜனை, பிருந்தாவனம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சுவாதி திருவீதியுலா நடக்கிறது. பேரூர் மணிவாசகர் மன்றத்தினர் தமிழ்முறைப்படி, வேள்வி பூஜை செய்கின்றனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !