உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் நகர பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திண்டிவனம் நகர பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திண்டிவனம்: திண்டிவனத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடந்தது. அனைத்து விநாயகர் சிலைகளும், செஞ்சி ரோட்டிலுள்ள அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து நேற்று முன்தினம், மரக்காணம் கடற்கரைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில், தொழிலதிபர் பாபு, பா.ஜ., நகர தலைவர் முருகன், இந்து முன்னணி இளங்கோ, வழக்கறிஞர் வேலுமணி, முன்னாள் கவுன்சிலர் சுகுமார், மோகன், யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மரக்காணம் அடுத்த கைப்பாணிக்குப்பத்திலுள்ள கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. முன்னதாக திண்டிவனம் டி.எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !