ஓரியூர் ஆரோக்கிய அன்னைஆலய தேர்பவனி
ADDED :3397 days ago
திருவாடானை: ஓரியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.இங்கு ஆக., 29ல் கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித சூசையப்பர், புனித அருளானந்தர், புனித ஆரோக்கியஅன்னை சொரூபங்கள் பவனி வந்தது. ஓரியூர் உட்பட 11 கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.