மேல்மலையனூர் கோவிலில் ரூ.32 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :3335 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ரூ32 லட்சம் பணத்தை, பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இப்பணியை, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் பார்வையிட்டனர். இதில் பக்தர்கள் 32 லட்சத்து 44 ஆயிரத்து 524 ரூபாயும், 161 கிராம் தங்கமும், 315 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் உடனிருந்தனர்.