உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,வடபத்ரசயனர் கோயில் செப்புத்தேரோட்டம்

ஸ்ரீவி.,வடபத்ரசயனர் கோயில் செப்புத்தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு நேற்று செப்புத்தேரோட்டம் நடந்தது. கடந்த அக்.3ந்தேதி முதல் புரட்டாசி பிரம்மோற்சவத்திருவிழா நடந்து வருகிறது. 5ம் நாளன்று கருடசேவை, 7ம் நாளன்று சயனசேவையும் நடந்தது. 9ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு திருத்தேரில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி எழுந்தருளினர். ரகு பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின் பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !