ஊத்துக்கோட்டை முருகப் பெருமானுக்கு வரும் 6ல் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3299 days ago
ஊத்துக்கோட்டை: முருகப் பெருமானுக்கு, 11ம் ஆண்டு, கந்த சஷ்டி விழாவை ஒட்டி, வரும், 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டையில் உள்ளது ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதம், முருகப் பெருமானுக்கு, கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழா, இந்தாண்டு, வரும் 5ம் தேதி துவங்குகிறது.