உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

கொளஞ்சியப்பர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

விருத்தாசலம்: விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. விருத்தாசலம், மணவாநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள எட்டு உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நேற்று நடந்தது. ஆய்வாளர் சுபத்ரா, செயலர் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என 20க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 209 ரூபாய் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உண்டியல் திறந்து காணிக்கை எண்ணியபோது, 11 லட்சத்து 25 ஆயிரத்து 298 ரொக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !