உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலைக்கு 2000 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தி.மலைக்கு 2000 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அண்ணாமலையார் மலையில் மகா தீபம் 12-ந்தேதி ஏற்றப்படுகிறது. மேலும் 13-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து மக்கள் குவிவதால் அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து 600 பஸ்கள் : பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு . சென்னை, சேலம், வேலூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகை, புதுவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த 2000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !