உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் கோவிலில் சூரசம்ஹார விழா

ரிஷிவந்தியம் கோவிலில் சூரசம்ஹார விழா

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் சுவாமி சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. கடந்த 4ம் தேதி நவவீரர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் சூரசம்ஹார விழாவும் நடந்தது. முருகன், நவவீரர்கள், சூரன் வேடமணிந்து முருகன் பாடல்களை பாடியபடி சுவாமி திருவீதியுலாவில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு சுப்ரமணிய சுவாமிக்கும் வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று இடும்பன் பூஜையுடன் விழா நிறைவடைந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். செங்குந்தர் சமூகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !