உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்!

தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயிலில், 1000 கிலோ அரிசி, 100 கிலோ எடை கொண்ட காய்கறிகளால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு தினம்தோறும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.இக்கோவிலில் உள்ள பெருவுடையார், பெரிய நாயகி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிரதோஷ நாட்களில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த சிறப்பு வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.இந்த அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பெருவுடையார் திருமேனிக்கு 1000 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், 100 கிலோ எடைக் கொண்ட காய்கறிகள்,இனிப்பு வகை ஆகியவையால் படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை பிரசாதமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !