உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கை அம்மனுக்கு மகா சண்டி யாகம்

துர்க்கை அம்மனுக்கு மகா சண்டி யாகம்

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியொட்டி துர்க்கை அம்மனுக்கு மகா சண்டியாக பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மகா சண்டியாக பூஜை நடந்து வருகிறது. ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி இரவு, 7:00 மணியளவில், கோ, கஜ, அஸ்வ, சுமங்கலி, பிரம்மச்சாரி, வடுக, கன்னிகா பூஜைகளுடன், மகா மங்கள சண்டி ஹோமங்கள் நடந்தன. இரவு, 9:00 மணியளவில் சந்தன காப்பு, செவ்வாடை சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !