உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் 7 நாட்களில் ரூ.95.39 லட்சம் வசூல்

பழநி கோயிலில் 7 நாட்களில் ரூ.95.39 லட்சம் வசூல்

பழநி, பழநிமலை கோயில் உண்டியலில் ஏழு நாட்களில் ரூ.95 லட்சத்து 39 ஆயிரம் வசூலாகியுள்ளது. வங்கிகளின் சில்லரை தட்டுப்பாட்டை போக்க முதுநிலை கோயில்களில் வாரம்தோறும் உண்டியல்கள் எண்ணும் பணி நடக்கிறது. அதன்படி பழநி மலைக்கோயிலில் ஏழு நாட்களுக்குபின் கார்த்திகை மண்டபத்தில் டிச.,30 உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.95 லட்சத்து 39ஆயிரத்து 673 கிடைத்துள்ளது. தங்கம் 275 கிராம், வெள்ளி 3,960 கிராம், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்136, தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், உருவம், உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், மதுரை மண்டல இணை ஆணையர்
பச்சையப்பன், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !