உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை 3 லட்சம் ரூபாய்

தேசம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை 3 லட்சம் ரூபாய்

நகரி: தேசம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள், 3.03 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில், தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை, அங்குள்ள உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோவில் அதிகாரி முனிகிருஷ்ணய்யா முன்னிலையில், ஊழியர்களால் பணம், நகை, வெள்ளி என, தனித்தனியாக பிரித்து கணக்கிடப்பட்டது. இதில், 3,03,164 ரூபாய் ரொக்கம், 3 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !