சதுரங்கப்பட்டினத்தில் அங்காளம்மனுக்கு பால்குட அபிஷேகம்
ADDED :3200 days ago
சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினத்தில், புத்தாண்டு வழிபாட்டிற்காக பெண்கள் பால் குடம் கொண்டு சென்று, அங்காளம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து, பால் குடங்களை தலையில் சுமந்து, வீதிகளில் சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.