சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக் கவசம் உபயம்
ADDED :3323 days ago
திருநகர், திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர் விநாயகர் சன்னிதி அருகே மீனாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளார். அதே போன்று வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன் சன்னிதி அருகில் சிவபெருமானுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளனர். இந்த மீனாட்சி அம்மனுக்கு ஒரு கிலோ எடையில் வெள்ளிக் கவசத்தை திருநகர் பக்தர் ஒருவர் உபயமாக வழங்கினார்.