உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச பெருமாள் கோவிலில் 97ம் ஆண்டு உற்சவ விழா

வெங்கடேச பெருமாள் கோவிலில் 97ம் ஆண்டு உற்சவ விழா

உத்திரமேரூர் : திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவிலில், 97ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய, மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றங்கரை மீது, அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழா மற்றும் சொர்க்க வாசல் தரிசனம் நடப்பது வழக்கம். அதன் படி, 97ம் ஆண்டு உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு திருமஞ்சனமும், காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை சொர்க்க வாசற்படி தரிசனமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை கோபுர வாயிலில், மலரால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, மேள தாளத்துடன் திருமுக்கூடல் பகுதியில் வீதி உலா வந்த அப்பன் வெங்கடேச பெருமானை பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இவ்விழாவில், திருமுக்கூடல் மற்றும் அப்பகுதியை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !