மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3230 days ago
திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலானமத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர்பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை, ராகுகால பூஜை நடந்தது. காலை முதல், மாலை வரை, திரளானபெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.